ads

வெற்றியோ தோல்வியோ என் அரசியல் பயணத்தை பாதிக்காது கமல்ஹாசன்

வெற்றியோ தோல்வியோ என் அரசியல் பயணத்தை பாதிக்காது கமல்ஹாசன்

வெற்றியோ தோல்வியோ என் அரசியல் பயணத்தை பாதிக்காது கமல்ஹாசன்

இந்திய வர்த்தக சம்மேளனம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் நிகழ்ச்சி (FICCI) நுங்கம்பாக்கத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான  கமல்ஹாசன் கூறியதாவது, தகுதியும் திறமையும் வாய்ந்த பி.இ, பி.எச்.டி படித்தவர்கள், vao பணிக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை  மாற்ற  வேண்டும். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் அரசியல் செய்கிறார்கள். காவிரிப் பிரச்சனைக்காக போராட வேண்டியது நம் கடமை. தமிழகத்தில் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்க  உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். 

மேலும், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில், கேம் சேஞ்சர் விருது பெற்ற கமல், என் திரையுலக பயணத்தில், இது போன்ற நிறைய மேடைகளில் ஏறி இருக்கிறேன். தற்போது இந்தக் கலையின் மூலம் எனக்கு புதிய மேடை கிடைத்துள்ளது. அதனால், விரைவில், கலையுலகிற்கு விடை கொடுக்க வேண்டி வரும் என்று தெரிவித்திருந்தார். அரசியலில் நுழைந்தபின் சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கமலின் இன்றைய பேட்டி அமைந்துள்ளது.

வெற்றியோ தோல்வியோ என் அரசியல் பயணத்தை பாதிக்காது கமல்ஹாசன்