ads

இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டத்தில் ஆமிர் கான் பிரபாஸ்

இயக்குனர் ராஜமௌலியின் மகாபாரத கதையில் பிரபாஸ் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இயக்குனர் ராஜமௌலியின் மகாபாரத கதையில் பிரபாஸ் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ராஜமௌலி, 'பாகுபலி 2' படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து புதுவித களத்தில் ஆக்சன் படத்தினை உருவாக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு சுமார் 1000 கோடி பொருட்செலவில் மகாபாரத கதையை பிரமாண்டமாக உருவாக்க உள்ளார்.

இதில் இடம் பெறவுள்ள கிருஷ்ணன், கர்ணன், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், சகுனி, திரவுபதி போன்ற கதாபாத்திரங்களுக்கு நடிகர் நடிகைகள் தேர்வு நீண்ட காலங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடிகர் அமீர் கான் கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பிறகு பாகுபலி நாயகனான பிரபாஸை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இவர் அர்ஜுனன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. ஏற்கனவே இயக்குனர் ராஜமௌலியின் சத்ரபதி, பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்களில் பிரபாஸ் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் நான்காவது முறையாக ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்போது இயக்குனர் ராஜமௌலி இரு கதாநாயகர்கள் கதையை உருவாக்கி வருகிறார். இந்த படத்தினை முடித்த பிறகு அடுத்த ஆண்டில் மகாபாரதம் கதையை கையில் எடுக்க உள்ளார். 

கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் ஆமிர் கான் கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் ஆமிர் கான்

இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டத்தில் ஆமிர் கான் பிரபாஸ்