ads

சூர்யா 37 படத்தில் இணைந்த நடிகர் சிராக் ஜனி அதிகாரபூர்வ அறிவிப்பு

இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள

இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள 'சூர்யா 37' படத்தில் பாலிவுட் நடிகர் சிராக் ஜனி முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா இயக்குனர் செல்வராகவன் இயக்கும் 'என்ஜிகே' படத்திலும், இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கும் 'சூர்யா 37' படத்திலும் பிசியாக உள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் அரசியல் வாதியாக சமூக போராளியாக நடித்து வரும் 'என்ஜிகே' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் தீபாவளிக்கு வெளியிட மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த படத்திற்கு பிறகு மீண்டும் கேவி ஆனந்த் இயக்கவுள்ள புதுப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக சயிஷா நடிக்க உள்ள இந்த படத்தில் மோகன்லால், சமுத்திரக்கனி, போமன் இராணி, ஆர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இவர்களுடன் பாலிவுட் நடிகரான சிராக் ஜனி இணைந்துள்ளதாக இயக்குனர் கேவி ஆனந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சிராக் ஜனியின் பிறந்த நாளான இன்று இயக்குனர் கேவி ஆனந்த் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார். பல முன்னணி நடிகர்கள் ஒன்றிணையும் இந்த படத்தின் அடுத்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட உள்ளது. 

சூர்யா 37 படத்தில் இணைந்த நடிகர் சிராக் ஜனி அதிகாரபூர்வ அறிவிப்பு