Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பலூனை தொடர்ந்து பாம்பில் இணையும் ஜெய்

jai new movie title neeya 2

த்ரில்லர் படமான பலூன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜெய் தற்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் காமெடியை மையமாக கொண்ட 'கலகலப்பு 2', வெங்கட் பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தினை தொடர்ந்து ஜெய் ஒரு புது படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது.இந்த படத்தினை இயக்குனர் சுரேஷ் இயக்கவுள்ளார். இவர் கடந்த 2011ம் ஆண்டில் விமல் நடிப்பில் வெளிவந்த 'எத்தன்' படத்தின் மூலம் முதல் முறையாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.     

இதனை தொடர்ந்து இயக்குனர் சுரேஷ், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘நீயா' படத்தினை போன்று பாம்புகள் பழிவாங்கும் உணர்ச்சியை மையமாக கொண்டு ஒரு படத்தினை இயக்கவுள்ளார். இதனால் சுரேஷ் இயக்கவிருக்கும்  புது படத்திற்கு ‘நீயா 2' என்ற தலைப்பினை வைத்துள்ளனர். இந்த படத்தில் நாயகனாக நடிகர் ஜெய் இணைந்துள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக கேத்ரின் திரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் என மூன்று நாயகிகள் களமிறங்க உள்ளனர். இந்த படத்தில் ஜெய் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக வலம் வரவுள்ளார். தற்பொழுது ப்ரீ -ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதத்தில் துவங்கி சென்னை, கேரளா, மதுரை சுற்றியுள்ள பகுதியில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.        

பலூனை தொடர்ந்து பாம்பில் இணையும் ஜெய்