ads

நடிகர் மகேந்திரனின் நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு டைட்டில் லுக் போஸ்டர்

நடிகர் மகேந்திரன், நல் செந்தில் குமார் அவர்கள் இயக்க உள்ள புது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு

நடிகர் மகேந்திரன், நல் செந்தில் குமார் அவர்கள் இயக்க உள்ள புது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு 'நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் மகேந்திரன், நல் செந்தில் குமார் அவர்கள் இயக்க உள்ள புது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு 'நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் பிரேம்ஜி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தை ஜிஎஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருள்குமார் தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசைமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க உள்ளார். நீண்ட நாள் இடைவெளியில் நடிகர் மகேந்திரன் நடிப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இவர் 1994-ஆம் ஆண்டு 'நாட்டாமை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமான இவர் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தன்னுடைய வாழ்க்கை முழுவதும் சினிமாவில் அர்ப்பணித்த இவர் தாய்குலமே தாய்குலமே, கும்பகோணம் கோபாலு போன்ற படங்களுக்காக இரண்டு முறை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ் நாடு விருதும், தெலுங்கில் தேவி, லிட்டில் ஹார்ட்ஸ் போன்ற படங்களுக்காக இரண்டு முறை நந்தி விருதுகளும் வாங்கியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக 100 படங்களுக்கு மேல் நடித்த இவர் நாயகனாக 2010-இல் வெளியான 'முதல் காதல் மழை' படத்தில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து நாயகனாக விழா, என்றுமே ஆனந்தம், விந்தை, திட்டி வாசல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனை அடுத்து இவருடைய நடிப்பில் தற்போது உருவாக உள்ள படம் 'நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு'. இந்த படம் கிராமத்து பின்னணியில் காதல் கதையாக உருவாக உள்ளது.

நடிகர் மகேந்திரனின் நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு டைட்டில் லுக் போஸ்டர்