ads

சூர்யா 37 படத்தில் சூர்யாவுடன் இணைந்த மோகன்லால் அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யாவின் அடுத்த படத்தில் மோகன்லால் இணைந்துள்ளதாக இயக்குனர் கேவி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் அடுத்த படத்தில் மோகன்லால் இணைந்துள்ளதாக இயக்குனர் கேவி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா, தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது 'NGK - நந்த கோபால குமரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படம் இயக்குனர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் முதல் படமாகும். ஒரு புரட்சியாளராக நடித்து வரும் சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு பிறகு சூர்யாவின் 37வது படத்தை இயக்குனர் கேவி ஆனந்த் இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான இவர் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த அயன், மாற்றான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இது தவிர கோ, அனேகன், கவண் போன்ற வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்துள்ளதாக இயக்குனர் கேவி ஆனந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் சூர்யா மற்றும் மோகன் லால் இணையும் முதல் படமாகும். முன்னதாக மோகன்லால் நடிகர் விஜயுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் மோகன்லால் சூர்யாவுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சூர்யா 37 படத்தில் சூர்யாவுடன் இணைந்த மோகன்லால் அதிகாரபூர்வ அறிவிப்பு