ads

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ள சாந்தனு

துப்பறிவாளன் படத்திற்கு பிறகு இயக்குனர் மிஸ்கின் புது படத்தை இயக்க உள்ளார். Photo Credit - @imKBRshanthnu (Twitter)

துப்பறிவாளன் படத்திற்கு பிறகு இயக்குனர் மிஸ்கின் புது படத்தை இயக்க உள்ளார். Photo Credit - @imKBRshanthnu (Twitter)

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் 'துப்பறிவாளன்'. இந்த படத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குனரான மிஸ்கின் சமீப காலமாக நடித்தும் வருகிறார். இவருடைய வெளியான முதல் படம் 'நந்தலாலா'. இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் இறுதியாக 'சவரக்கத்தி' படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் ராமுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'துப்பறிவாளன்' படத்திற்கு பிறகு மிஸ்கின் இயக்க உள்ள இந்த படத்தில் நடிகர் சாந்தனு நாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முன்னதாக இந்நிறுவனம் சுட்ட கதை, நளனும் நந்தினியும், நட்புனா என்னானு தெரியுமா போன்ற படங்களை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

இதற்கான அறிவிப்பை தயாரிப்பாளர் ரவீந்தர் தனது டிவிட்டரில் சாந்தனு, மிஸ்கின், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் ஆகியோர் அடங்கிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் நடிகர் சாந்தனு நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'முப்பரிமாணம்'. இதனை அடுத்து இயக்குனர் மிஸ்கின் இயக்கவுள்ள புது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் நடிகர் சாந்தனு வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று திரை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ள சாந்தனு