ads

இயக்குனர் பாலா படத்தில் இணைந்த காலா மனைவி

சிம்புவின் சரவணா படத்திற்கு பிறகு 12 வருடங்கள் கழித்து காலா படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎண்ட்ரி கொடுக்கிறார் ஈஸ்வரி ராவ். இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வர்மா படத்தில் நடிக்க உள்ளார்.

சிம்புவின் சரவணா படத்திற்கு பிறகு 12 வருடங்கள் கழித்து காலா படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎண்ட்ரி கொடுக்கிறார் ஈஸ்வரி ராவ். இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வர்மா படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ள படம் 'காலா'. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கரிகாலனுக்கு மனைவியாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் சிம்புவின் சரவணா படத்திற்கு பிறகு 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியுள்ளார் ஈஸ்வரி ராவ்.

ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த பிறகு இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவர் அடுத்ததாக அழியாத கோலங்கள் என்ற படத்தில் நடிக்க இருந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாலா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய படங்கள் குறித்த தகவலை எப்போதுமே இயக்குனர் பாலா ரகசியமாகவே வைத்திருப்பார். ஆனால் தற்போது இயக்குனர் பாலா 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் 'வர்மா' படத்தின் தகவல் கசிந்துள்ளது.

நாச்சியார் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ விக்ரம் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஈஸ்வரி ராவ் வேலைக்காரி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வேலைக்காரி கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் நடிகை ஈஸ்வரி ராவை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர் பாலா.

இயக்குனர் பாலா படத்தில் இணைந்த காலா மனைவி