ads

விசுவாசம் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி ஆகும் நஸ்ரியா

விசுவாசம் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி ஆகும் நஸ்ரியா

விசுவாசம் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி ஆகும் நஸ்ரியா

மலையாள நடிகையான நஸ்ரியா நசீம் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் 'திருமணம் எனும் நிக்கா'. இந்த படத்திற்கு பிறகு நஸ்ரியா நடிப்பில் தமிழில் ஒரு படங்கள் கூட வெளியாகவில்லை. மலையாளத்திலும் நான்கு ஆண்டுகளில் அவருடைய நடிப்பில் 'கூடே' என்ற ஒரு படம் மட்டுமே வெளியானது. திருமணத்திற்கு பிறகு படங்களில் அதிக கவனம் செலுத்தாமல் குடும்பத்தை அக்கறையாக கவனித்து வருகிறார்.

இவர் தற்போது தயாரிப்பாளராகவும் தன்னுடைய கணவரான பகத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் 'வரதன்' படத்தை தயாரித்து வருகிறார். தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி போன்ற 5 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களிடம் இவருக்கு ஆதரவு இருந்து வருகிறது. இதனால் 'நீங்கள் எப்போது நடிக்க வருவீங்க' என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நஸ்ரியா நசீம் தல அஜித்தின் 'விசுவாசம்' படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி ஆக உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. நேற்று நஸ்ரியா தனது டிவிட்டரில் "என்னுடைய அனைத்து தமிழ் ரசிகர்களுக்கும் ஒரு பெரிய அறிவிப்பு காத்திருக்கின்றது" என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இவருடைய அடுத்த பட அறிவிப்பாக இருக்கலாம் அல்லது விசுவாசம் படத்தில் இவர் நடிக்கும் அறிவிப்பாகவும் இருக்கலாம்.

விசுவாசம் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி ஆகும் நஸ்ரியா