ads

மலையாளத்தில் திலீப்பிற்கு ஜோடியாகும் நடிகை ஊர்வசி

திலீப்பின் நண்பர் நாதிர்ஷா இயக்கத்தில் திலீப் மற்றும் நடிகை ஊர்வசி ஆகியோர் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

திலீப்பின் நண்பர் நாதிர்ஷா இயக்கத்தில் திலீப் மற்றும் நடிகை ஊர்வசி ஆகியோர் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

நடிகை ஊர்வசி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் தற்போது வரை 150கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தமிழில் இறுதியாக மகளிர் மட்டும், பள்ளி பருவத்திலே போன்ற படங்கள் வெளியானது. இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் ஓ அந்த நாட்கள், போட்டு, கூத்தான், கோப்பெருந்தேவி, டாவு போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இவர் தமிழுக்கு 1983 இல் 'முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலே தமிழ்நாட்டின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை பெற்றவர். கிட்டத்தட்ட 24 வருடங்களாக தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் ஏராளமான படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பல விருதுகளை வென்றவர்.

இவரது நடிப்பில் மலையாளத்தில் இறுதியாக 'விஸ்மயம்' என்ற படம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது லவ் ஆக்சன் டிராமா, கேசு ஈ வாடிண்டே நாதன் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் 'கேசு ஈ வாடிண்டே நாதன்' என்ற படத்தில் நடிகர் திலீப் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை திலீப்பின் நண்பர் நாதிர்ஷா இயக்க உள்ளார்.

இந்த படத்தில் இவர் திலீப்பிற்கு ஜோடியாக ஊர்வசி நடிக்க உள்ளார். திலீப்பை விட பல வருடங்கள் மூத்தவர் தான் ஊர்வசி அவருக்கு ஜோடியாக ஊர்வசி நடிப்பது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த படத்தில் திலீப் 70 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ஊர்வசி நடிக்க உள்ளார்.

மலையாளத்தில் திலீப்பிற்கு ஜோடியாகும் நடிகை ஊர்வசி