ads

உதயநிதி ஸ்டாலினுடன் முதன் முறையாக ஜோடி சேரும் அதிதி ராவ்

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு அதிதி ராவ் உதயநிதி படத்தில் நடிக்க உள்ளார்.

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு அதிதி ராவ் உதயநிதி படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின், நிமிர் படத்திற்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமியுடன் இணைந்து 'கண்ணே கலைமானே' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். தமன்னா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு உதயநிதி தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்துள்ளார்.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'துப்பாறிவாளன்' படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதன் பிறகு ஒரு நடிகராகவும் சவரகத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு நடிகர் சாந்தனு மற்றும் உதயநிதி ஆகியோரை வைத்து புது படத்தை இயக்க உள்ளார்.

இதில் உதயநிதி நடிக்க உள்ள படத்திற்கு நாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதிதி ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னமின் காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அதிதி ராவ், இதன் பிறகு அவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். பாலிவுட் நடிகையான இவர் தற்போது தமிழில் கவனம் செலுத்தி வருவதால் இவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. தற்போது உதயநிதி, அதிதி ராவ் முதன் முறையாக இணைந்துள்ள இந்த படம் வரும் செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

உதயநிதி ஸ்டாலினுடன் முதன் முறையாக ஜோடி சேரும் அதிதி ராவ்