ads

வட சென்னையை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி

வட சென்னை படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருவதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

வட சென்னை படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருவதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடசென்னை' படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட வருடங்களாக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தினை நடிகர் தனுஷ் நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படம் வெளியாவதற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.

வட சென்னையை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ், வெற்றிமாறன் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு உரையாடி வருகின்றனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் அமீர், 'வடசென்னை' படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

வட சென்னையை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி

இதன் மூலம் பொல்லாதாவன், ஆடுகளம் மற்றும் வடசென்னை படங்களுக்கு பிறகு மீண்டும் நான்காவது முறையாக தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பினையும் விரைவில் துவங்கவுள்ளனர். இந்த கூட்டணியில் வடசென்னை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நானும் இணைந்துள்ளதாக இயக்குனர் மற்றும் நடிகரான அமீர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் தொடர்ந்து சுவாரிஷ்யமாக உரையாடி வருகின்றனர். முடிவில் இது போன்ற பல சுவாரஸ்ய தகவல்கள் வெளிவரவுள்ளது.

வட சென்னையை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி