ads

அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் மே 4ஆம் தேதி வெளியீடு

அப்பாவிற்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பாசத்தை மையப்படுத்தி அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் உருவாகி வருகிறது.

அப்பாவிற்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பாசத்தை மையப்படுத்தி அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் உருவாகி வருகிறது.

நடிகர், பாடகர், தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக அமிதாப் பச்சன் நடிப்பில் இறுதியாக ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 'சர்க்கார் 3' படம் வெளியானது. 75 வயதான அமிதாப் பச்சன் தற்போது வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வயதானாலும் தொடர்ந்து சினிமா உலகில் தனது திறமையை நிரூபித்து கொண்டே வருகிறார்.

இவர் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் போன்ற விருதுகளை வென்றுள்ளார். இவருடைய நடிப்பில் தற்போது 102 நாட் அவுட், தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் '102 நாட் அவுட்' படத்தில் 102 வயது முதிர்ந்தவராக நடித்து வருகிறார்.

இவருடைய மகன் கதாபாத்திரத்தில் நடிகர் ரிஷி கபூர் 75 வயதுடையவராக நடித்து வருகிறார். இந்த படத்தை ஓ மை காட், ஆள் இஸ் வேல் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் உமேஷ் சுக்லா இயக்கி வருகிறார். இந்த வயதான காலங்களில் கெளவன்கள் செய்யும் ரகளைகள் தான் இந்த படம்.

அப்பாவிற்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பாசத்தை மையப்படுத்தியும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ட்ரீடோப் என்டர்டெய்ன்மெண்ட், பெஞ்ச் மார்க், சோனி பிக்ச்சர்ஸ், என்டர்டெய்ன்மெண்ட் இந்தியா போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் மே மாதம் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் புகைப்படங்கள் சமூக தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் மே 4ஆம் தேதி வெளியீடு