ads

ஆந்திர மெஸ்ஸில் வில்லனாக நடித்துள்ள பிரபல ஓவியர்

இயக்குனர் ஜெய் இயக்கத்தில் வரும் ஜூன் 22இல் வெளியாகவுள்ள ஆந்திரா மெஸ் படத்தில் பிரபல ஓவியர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஜெய் இயக்கத்தில் வரும் ஜூன் 22இல் வெளியாகவுள்ள ஆந்திரா மெஸ் படத்தில் பிரபல ஓவியர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விளம்பர பட இயக்குனர் ஜெய் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'ஆந்திரா மெஸ்'. ஷோ போட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நிர்மல் கே பாலா தயாரித்துள்ள இந்த படத்தில் நாயகனாக ராஜ் பரத் நடித்துள்ளார். இவர் முன்னதாக 555, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ரிச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக தேஜஸ்வினி என்பவர் நடித்துள்ளார்.

இவர்களுடன் பூஜா தேவரியா, வினோத், மதிவாணன் ராஜேந்திரன், பாலாஜி மோகன், ஆர் அமரேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஓவியரான ஏபி ஸ்ரீதர் நடித்துள்ளார். ஓவிய கலையில் பல விருதுகளை வென்றுள்ள இவருக்காக இந்த படத்தின் இயக்குனர் ஜெய், சென்னையில் உள்ள கூத்து பட்டறையில் 15 நாட்கள் நடிப்பு பயிற்சி அளித்துள்ளார்.

நீண்ட காலங்களாக தாமதமாகி வந்த இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 2015இல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த படம் வரும் ஜூன் 22இல் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மலையாள, இந்தி இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். இவர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் உதவியாளராக இருந்தவர். 

ஆந்திர மெஸ்ஸில் வில்லனாக நடித்துள்ள பிரபல ஓவியர்