ads

இன்னைக்கு தாண்டா பிக்பாஸ் வீட்டில் இரண்டு நல்ல விஷயம் நடக்க போகுது

இன்றைய நிகழ்ச்சியில் பாலாஜிக்கும், சென்றாயனுக்கும் வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனை அமைகின்றது.

இன்றைய நிகழ்ச்சியில் பாலாஜிக்கும், சென்றாயனுக்கும் வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனை அமைகின்றது.

பிக்பாஸ் வீட்டில் குடும்பங்களின் பாச போராட்டத்துடன் ப்ரீஸ் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. பெற்றோர் வரும் போது போட்டியாளருக்கு இருக்கும் விளையாட்டு ஆர்வத்தை சோதித்து பார்க்க இந்த ப்ரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டாஸ்க்கில் டேனியல், ரித்விகா, ஜனனி ஆகியோர் போங்கடா நீங்களும் உங்க டாஸ்க்கும் என விளையாட்டை தூக்கி எரிந்து பாசத்திற்காக ஓடினர்.

முன்னதாக மும்தாஜ், ஐஸ்வர்யா, ரிதிவிகா, யாஷிகா, ஜனனி, டேனியல் ஆகியோரது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். நேற்று ரித்விகா மற்றும் ஐஸ்வர்யாவின் கதறல் ரசிகர்களை நெகிழ வைத்தது. இதன் பிறகு இன்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் பாலாஜி மற்றும் சென்றாயனின் குடும்பத்தின் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகின்றனர்.

இதில் பாலாஜியின் மனைவி நித்யா, கடிதம் மூலம் தான் செய்த தவறை உணர்ந்து பாலாஜியுடன் மனம் விட்டு பேசுகிறார். இந்த 9 வருடத்தில் அழாத உன்னை நேற்று அழ வைத்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என மனம் விட்டு பேசுகிறார். எப்படியோ ஒரு வழியாக பிக்பாஸ் மூலம் பாலாஜியும் அவரது மனைவியும் ஒன்று சேர்ந்துள்ளனர். இது தவிர இன்று சென்றாயனின் மனைவி கயல்விழியும் பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று நுழைகிறார்.

நீண்ட வருடங்களாக குழந்தையே இல்லை என்று தவித்த அவர்களுக்கு இன்று தான் நல்ல செய்தி காத்திருக்கிறது. நீங்கள் அப்பா ஆகிட்டிங்க என்று சொல்லும்போது சென்றாயன் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு மிகவும் சந்தோசப்படுகிறார். இதன் பிறகு சென்றாயனின் மனைவிக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவரின் வாழ்த்துக்களுடன் வளைகாப்பு நடக்கின்றது. இதன் மூலம் 74 நாட்களுக்கு பிறகு இன்று தான் இரண்டு நல்ல விஷயம் நடக்க உள்ளது. 

இன்னைக்கு தாண்டா பிக்பாஸ் வீட்டில் இரண்டு நல்ல விஷயம் நடக்க போகுது