ads

பாலாஜியை வச்சி செய்ய போறேன் - ஆங்ரி தலைவி ஐஸ்வர்யா

தலைவராக பொறுப்பேற்ற பிறகு போட்டியாளர்கள் மீது இருக்கும் பழைய கணக்கை தீர்க்க சந்திரமுகியாக மாறியிருக்கிறார் ஐஸ்வர்யா.

தலைவராக பொறுப்பேற்ற பிறகு போட்டியாளர்கள் மீது இருக்கும் பழைய கணக்கை தீர்க்க சந்திரமுகியாக மாறியிருக்கிறார் ஐஸ்வர்யா.

பிக்பாஸ் தமிழ் சீசன் 2வின் 44வது நாள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. ஆரம்பத்தில் குடும்பம் என்று நினைத்து ஒருவருக்கொருவர் நண்பர்களாக பழகி வந்தவர்கள் தற்போது கடும் வாக்கு வாதங்களில் சண்டை போட்டு வருகின்றனர். இது ஒரு போட்டியே, இதனால் யாரையும் நம்ப கூடாது என்ற நிலைமைக்கு போட்டியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது ஐஸ்வர்யா தலைமை தாங்கி வருகிறார்.

ஆரம்பத்தில் குறும்பாக ஓடி ஆடி திரிந்த ஐஸ்வர்யா, தலைமை பொறுப்பேற்ற பிறகு ஆணவத்துடன் சந்திரமுகியாக மாறி விட்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து தற்போது வரை யார் யாரெல்லாம் தன்னை கொச்சை படுத்தினார்களோ அவர்களை பழிவாங்க துடிக்கிறார். நேற்று நடந்த பிக்பாஸில் பாலாஜிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் நடைபெற்றது.

இந்த வாக்கு வாதத்தில் முன்பு நடந்த விஷயங்களையெல்லாம் கிளறி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் இரண்டு பேருக்கும் இடையே சண்டையை அதிகப்படுத்திவிட்டனர் சக போட்டியாளர்கள். இதற்கு பாலாஜியின் கெட்ட வார்த்தை காரணமாக அமைந்துள்ளது.

இந்த சண்டையை அடக்காமல் இன்னும் அதிகப்படுத்த பாலாஜி முன்பு பேசிய விடீயோவை பிக்பாஸ் தோண்டி எடுத்து ஐஸ்வர்யாக்கும் ஜனனிக்கும் போட்டு காட்ட இன்னும் ஆத்திரமடைகிறார் தலைவி ஐஸ்வர்யா. இந்த சண்டை முற்றி இன்று நடக்கவுள்ள பிக்பாஸில் 'பாலாஜியை வச்சி செய்வேன்' என்று அவர் மீது குப்பையை கொட்டுவது போன்ற ப்ரோமோ விடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதனால் தற்போது பாலாஜிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையேயான சண்டையை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

பாலாஜியை வச்சி செய்ய போறேன் - ஆங்ரி தலைவி ஐஸ்வர்யா