ads

இந்த பொம்மல தப்பானவ மும்தாஜை வெளுத்து வாங்கும் மகத்

பொம்மலாட்டம் டாஸ்க்கிலிருந்து மும்தாஜ், மகத், ஐஸ்வர்யா ஆகியோரின் சண்டை தொடர்ந்து வலுத்து கொண்டே செல்கிறது.

பொம்மலாட்டம் டாஸ்க்கிலிருந்து மும்தாஜ், மகத், ஐஸ்வர்யா ஆகியோரின் சண்டை தொடர்ந்து வலுத்து கொண்டே செல்கிறது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 64வது நாள் நேற்று ஏவிக்சனுடன் நிறைவடைந்துள்ளது. டேனியல், சென்றாயன், ஜனனி மற்றும் வைஷ்ணவி ஆகியோரில் வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார். பொன்னம்பலத்திற்கு பிறகு வாரம் வாரம் ஏவிக்சனில் வந்து செல்கிறார் சென்றாயன். இந்த வாரத்திற்கான நாமினேஷனும் இன்று துவங்குகிறது. இந்த நாமினேஷனில் மும்தாஜ், மகத், ஐஸ்வர்யா ஆகியோர் தேர்வாவதாக தெரிகிறது.

ஏற்கனவே மும்தாஜ், மகத், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோரின் சண்டை வலுத்து வரும் நிலையில் ஏவிக்சன் நாமினேஷன் இன்று துவங்குகிறது. இந்த நாமினேஷன் ஒவ்வொரு வாரமும் புது விதமாக துவங்குகிறது. சென்ற வாரத்தில் போட்டியாளர் மீது அம்பு விட்டு தேர்வு செய்த நிலையில் இந்த வாரம் போட்டோவிற்கு பின்னால் பானையை வைத்துள்ளனர்.

இந்த பானையை உடைத்து அவரவர் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் ஐஸ்வர்யா, மும்தாஜை சல்லி சல்லியாக நொறுக்கி விட்டார். இது தவிர பிக்பாஸ் புது ப்ரோமோவில் மகத் நடு இரவிலும் மும்தாஜை வெளுத்து வாங்குகிறார். "நான் பொதுவா எல்லாரிடமும் சண்டை போட்டால் அவரிடம் போய் மன்னிப்பு கேட்டு விடுவேன். ஆனா இந்த பொம்மல தப்பானவனு 100% எனக்கு தெரியும். அதனால தான் அவ்வளவு சண்ட போட்டும் அவரிடம் மன்னிப்பு கேட்கல" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்ற வாரம் வரை 10 போட்டியாளர் இருந்த நிலையில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். தற்போது ஒவ்வொருவருக்கும் எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இது தவிர வைல்ட் கார்ட் என்ட்ரிக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். இந்த வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வரப்போகும் போட்டியாளர்கள் குறித்த வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த பொம்மல தப்பானவ மும்தாஜை வெளுத்து வாங்கும் மகத்