ads

இன்று பிக்பாஸில் மகத்திற்கு குறும்படம் காத்திருக்கிறது

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத்தின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத்தின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் 69வது நாளை கடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு மேல் நடைபெற்று வந்த உத்தம வில்லன் டாஸ்க் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த டாஸ்க் மூலம் மகத் அனைவரிடமும் கெட்ட பெயரை சம்பாதித்து தன்னுடைய காதலியையும் இழந்துள்ளார். இது தவிர ஏற்கனவே மகத், மும்தாஜிடம் அவருடைய கேரக்ட்டரால் பேசாமல் இருந்து வந்த நிலையில் தற்போது டேனி மற்றும் பாலாஜி ஆகியோரிடமும் பேசுவதில்லை.

புது புது டாஸ்கால் தன்னுடைய பொறுமையை இழந்து கோபப்படும் மகத்தை, சக போட்டியாளர்கள் வெறுத்து வருகின்றனர். இதனால் தற்போது இந்த வார ஏவிக்சனில் மகத் வெளியேற அதிகபட்ச வாய்ப்புள்ளது. மேலும் நேற்று வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் விஜயலட்சுமி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். ஏற்கனவே மகத்தும், விஜயலட்சுமியும் பழக்கமானவர்கள், ஆனால் மகத்தின் கேரக்டர் அறிந்து அவரிடமும் கூடவே ஒட்டி திரியும் யாஷிகா மற்றும் யாஷிகாவிடமும் சற்று விலகியே வருகிறார்.

மேலும் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் கமலை விட ரசிகர்கள் மகத்தின் மீது அதிக கோபமாக உள்ளனர். மகத் மற்றும் ஐஸ்வர்யாவை திருத்தியே ஆக வேண்டும் ரசிகர் ஒருவர் கோரிக்கை வைக்க லிஸ்ட் சொல்லிட்டீங்கள்ள..இனி சமையல் தான் என்று சபதம் எடுத்துள்ளார். இது தவிர மற்றொரு ப்ரோமோவில் மும்தாஜ் மற்றும் மகத் இருவரில் யார் மோசமாக நடந்து கொண்டது என்று கேள்வி கேட்க அனைவருமே மகத்தை கைகாட்டுகின்றனர். தவறு செய்து விட்டமோ என்று அவரும் முழி பிதுங்குகிறார். ஒரு குறும்படம் வேற அவருக்காக காத்திருக்கிறதாம். இன்றைக்கு என்ன நடக்குமோ..

இன்று பிக்பாஸில் மகத்திற்கு குறும்படம் காத்திருக்கிறது