ads

டுபாக்கூர் மும்தாஜ் அராத்து யாஷிகா உஷார் பக்கிரி சென்ட்ராயன்

நேற்று டேனியல் ஏவிக்சனில் வெளியேறிய பிறகு ஒவ்வொருவருக்கும் பட்ட பெயரை சூட்டி சென்றுள்ளார்.

நேற்று டேனியல் ஏவிக்சனில் வெளியேறிய பிறகு ஒவ்வொருவருக்கும் பட்ட பெயரை சூட்டி சென்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 78வது நாள் நேற்று ஏவிக்சனுடன் நிறைவடைந்தது. இந்த ஏவிக்சனுக்காக டேனியல், பாலாஜி, ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் ஒருத்தரை மட்டும் வெளியேற்ற வித்தியாசமான முறையில் விளையாட்டு நடந்தது. இந்த விளையாட்டின் மூலம் டேனியல் தேர்வு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே 9பேராக இருந்த பிக்பாஸ் வீட்டில் தற்போது 8பேர் உள்ளனர். இன்னும் நான்கு வாரத்தில் பிக்பாஸ் கோப்பையை கைப்பற்ற போவது யார் என தெரிந்து விடும்.

கடந்த வாரம் வரை மும்தாஜின் அழுகையும், அன்பும் அவரை காப்பாற்றி வந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல அந்த அன்பு போலியானதா வெளிச்சத்திற்கு வருகிறது. நேற்று டேனியல் வெளியேற்றப்படும் போது பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒவ்வொருவருக்கும் புது பெயரை சூட்டி சென்றுள்ளார். இதன் படி டுபாக்கூர் மும்தாஜ், அல்லக்கை ஐஸ்வர்யா, அராத்து யாஷிகா, வாய் உதார் ராஜலட்சுமி, பேஜார் ரித்விகா, உஷார் பக்கிரி சென்றாயன், கப்ஸா பாலாஜி, போங்கு ஜனனி போன்று புது பட்ட சூட்டி அதற்கு விளக்கத்தையும் அளித்து சென்றார்.

அவர் வெளியே போன பிறகு இந்த பட்ட பெயருக்கும் பிக்பாஸ் வீட்டில் புலம்பல்கள் காணப்படுகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் டுபாக்கூர் மும்தாஜூக்கும், அல்லக்கை ஐஸ்வர்யாவையும் எதிராக போட்டியாளர்கள் புறம்பேசி வருகின்றனர். இது தவிர இன்று இந்த வார ஏவிக்சனுக்கான நாமினேஷன் நடைபெறுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

டுபாக்கூர் மும்தாஜ் அராத்து யாஷிகா உஷார் பக்கிரி சென்ட்ராயன்