ads

பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் ஐஸ்வர்யாவை புகழ்ந்த ஆர்த்தி

இன்று பிக்பாஸ் வீட்டில் முதல் சீசன் போட்டியாளர்கள் நுழைந்துள்ளார். உள்ளே வந்தவுடன் ஆர்த்தி ஐஸ்வர்யாவை புகழ்ந்து தள்ளுகிறார்.

இன்று பிக்பாஸ் வீட்டில் முதல் சீசன் போட்டியாளர்கள் நுழைந்துள்ளார். உள்ளே வந்தவுடன் ஆர்த்தி ஐஸ்வர்யாவை புகழ்ந்து தள்ளுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 86வது நாள் இன்று நடைபெற உள்ளது. இன்று இந்த வார ஏவிக்சனுக்கான நாமினேஷன் நடைபெற உள்ளது. இந்த வார ஏவிக்சனுக்கு ரித்விகா மட்டும் நாமினேட் செய்யப்பட்டிருந்தார். நேற்று கமல் ஹாசன் தனக்கு இருக்கும் உரிமையை வைத்து ஐஸ்வர்யாவை நாமினேட் செய்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸிடம் இந்த வார ஏவிக்சனுக்கு இரண்டு பேரை தேர்வு செய்யவும் பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த வார ஏவிக்சனுக்கு ரித்விகா, ஐஸ்வர்யாவுடன் நான்கு பேர் தேர்வாகவுள்ளனர். இந்நிலையில் இன்றைய பிக்பாஸின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் பாலாஜி, ஐஸ்வர்யாவிடம் மறுபடியும் மக்களை சந்திக்க தயாரா என்று கேள்வி கேட்கிறார். இதனால் தற்போது கடந்த வார தப்பித்த ஐஸ்வர்யாவை இந்த வாரம் மக்கள் காப்பாற்றுவார்களா என்பது ஹவுஸ் மெட்ஸின் கேள்வியாக உள்ளது.

மேலும் இன்று பிக்பாஸ் வீட்டில், பிக்பாஸின் முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களான ஆர்த்தி, காயத்ரி, வையாபுரி, சினேகன் ஆகியோர் நுழைந்துள்ளனர். நுழைந்தவுடன் ஆர்த்தி, ஐஸ்வர்யாவிடம் தமிழ்நாட்டின் திருமகளே, பிக்பாஸ் வீட்டின் மருமகளே என்று புகழ்ந்து தள்ளுகிறார். இதனை கண்டு ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். பிக்பாஸ் இறுதி நாளுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளது. வரும் இரண்டு வாரங்களில் 7பேரில் இரண்டு பேரை ஏவிக்சன் மூலம் வெளியேற்றவுள்ளார். மீதமுள்ள 5 பேர் இறுதி போட்டிக்கு தயாராக உள்ளனர். இன்னும் மூன்று வாரங்களே உள்ளது..பாப்போம்.

பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் ஐஸ்வர்யாவை புகழ்ந்த ஆர்த்தி