ads

இது என்னடா முட்டிகால் கிரிக்கெட்

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வித்தியாசமான கிரிக்கெட் இடம்பெற்றது. இந்த முட்டிகால் கிரிக்கெட்டுக்கு நடுவராக வேற மும்தாஜ் இருந்தார்.

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வித்தியாசமான கிரிக்கெட் இடம்பெற்றது. இந்த முட்டிகால் கிரிக்கெட்டுக்கு நடுவராக வேற மும்தாஜ் இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 65வது நாள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. நேற்றைய நடந்த பிக்பாஸில் நாமினேஷன் மூலம் மகத், மும்தாஜ், பாலாஜி, சென்றாயன் ஆகியோர் இந்த வார ஏவிக்சனுக்கு பானையை உடைத்து தேர்வு செய்யப்பட்டனர். அதிலும் மும்தாஜின் பானை மட்டும் நொறுங்கி போய் உள்ளது. இதன் பிறகு போட்டியாளர்களுக்கு கிரிக்கெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

கிரிக்கெட் என்றதும் ரசிகர்கள் குஷியானார்கள், ஆனால் விளையாட்டை பார்த்து இது கிரிக்கெட் தானா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது. முட்டிகாலை குறிவைத்து அடிக்கும் இந்த விளையாட்டில் மகத் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த டாஸ்க்கில் மும்தாஜ் மீதுள்ள வெறுப்பினால் மகத் வேண்டுமென்றே சண்டைக்கு முயன்றார். இது தவிர நேற்றைய இரவில் இந்த பொம்பள தப்பானவ..எனக்கு 100% தெரியும்..என மும்தாஜை வெளுத்து வாங்குகிறார்.

மேலும் இன்றைய ப்ரோமோவில் பாம்பு, கழுதை, நீலி கண்ணீர், முட்டாள் போன்ற விருதுகளை வழங்கும் புது டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் பாம்பு மும்தாஜுக்கும், கழுதை விருது ஐஸ்வர்யாவுக்கும் செல்கிறது. யாஷிகா கொடுத்த நீலிக்கண்ணீர் விருதை ஜனனி ஏற்க மறுக்கிறார். இதன் மூலம் போட்டியாளர்களிடையே சண்டை அதிகமாகிறது. இதனால் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

இது என்னடா முட்டிகால் கிரிக்கெட்