ads

தாத்தாவை போலவே காமெடி நடிகராக வளர்ந்து வரும் பிஜேஸ் நாகேஷ்

நடிகர் நாகேஷை போலவே காமெடி நடிகராக வளர வேண்டும் என்று தீவிர முயற்சியில் நாகேஷ் பேரன் களமிறங்கியுள்ளார்.

நடிகர் நாகேஷை போலவே காமெடி நடிகராக வளர வேண்டும் என்று தீவிர முயற்சியில் நாகேஷ் பேரன் களமிறங்கியுள்ளார்.

தமிழ் திரையுலகில் காமெடிக்கென்று ஒரு தனி சகாப்தத்தை படைத்து தந்தவர் நடிகர் நாகேஷ். இவர் 1950 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு 57 வருடங்களாக 150க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் மறைந்த பிறகும் இவருடைய காமெடி திறமைக்கு இன்று வரையிலும் ரசிகர்களிடம் நல்ல மதிப்பு இருந்து வருகிறது. இவருக்கு பிறகு இவருடைய மகனான ஆனந்த் பாபுவும் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் தற்போது மெளன ராகம் சீரியலில் நடித்து வருகிறார். தற்போது வெளியாகியுள்ள பியார் பிரேமா காதல் படத்தில் நாயகிக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் நாகேஷின் மகனை தொடர்ந்து அவருடைய பேரனும் சினிமா துறையில் முன்னேறி வருகிறார். ஆனந்த் பாபுவின் மூத்த மகனான பிஜேஷ் நாகேஷ், தன்னுடைய தாத்தாவின் பெயரை காப்பாற்றும் முயற்சியில் காமெடி நடிகராக களமிறங்கியுள்ளார்.

இவர் தற்போது நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்வர் சுந்தரம்' படத்திலும், நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் 'பொன் மாணிக்கவேல்' படத்திலும் காமெடி நடிகராக நடித்துள்ளார். இது தவிர 'எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துக்குவான்' என்ற படத்தில் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். நாகேஷ் குடும்பத்தில் முதல் பேரனான பிஜேஷ் நாகேசை தொடர்ந்து இரண்டாவது பேரனான கஜேஷ் என்பவரும் 2014இல் 'கல்கண்டு' என்ற படத்தில் சினிமா துறையில் அறிமுகமாகியுள்ளார். 

தாத்தாவை போலவே காமெடி நடிகராக வளர்ந்து வரும் பிஜேஸ் நாகேஷ்