ads

பாலிவுட் நடிகை ஊர்வசியின் ஆதாரை வைத்து மர்ம நபர்கள் மோசடி

பிரபல பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியான ஊர்வசியின் ஆதார் எண்ணை வைத்து மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியான ஊர்வசியின் ஆதார் எண்ணை வைத்து மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.

தற்போது ஆதார் அட்டை மோசடியில் பொதுமக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அவதிப்படுகின்றனர். உண்மையான ஆதாரை போன்று போலியான ஆதாரை தயார் செய்து அதனை பல்வேறு காரணங்களுக்கு உபயோகப்படுத்தி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்தியா முழுவதும் அனைத்து துறைகளிலும் ஆதார் கட்டாயமாகி விட்டது.

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரியூட்டலா என்பவரின் போலியான ஆதாரை வைத்து ஹோட்டல் ரூம் புக்கிங் செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இந்த செய்தியறிந்து நடிகை ஊர்வசி தனது உதவியாளர் செய்திருக்கலாம் என்று அவரிடம் விசாரித்தார். ஆனால் அவர் நான் எந்த புக்கிங்கும் செய்யவில்லை என மறுக்கவே உத்திர பிரதேசத்தில் உள்ள பந்தாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல் துறையினர் இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகையான இவர் 2015-ஆம் ஆண்டில் மாடல் அழகிக்கான "மிஸ் திவா (Miss Diwa)" பட்டத்தை வென்றுள்ளார். இவர் தற்போது வரை ஹிந்தி, கன்னட மற்றும் பெங்காலி மொழிகளில் 7 படங்களில் நடித்துள்ளார். இவருடைய 'ஹெட் ஸ்டோரி 4' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இவர் தற்போது சல்மான் நடிப்பில் உருவாகி வரும் 'ரேஸ் 3' படத்தில் நடித்து வருகிறார். 

பாலிவுட் நடிகை ஊர்வசியின் ஆதாரை வைத்து மர்ம நபர்கள் மோசடி