ads

காமெடி கிங் செந்தில் பிறந்த நாளில் அவருடைய இனிமையான வாழ்க்கை வரலாறு

காமெடி நடிகர் செந்திலின் பிறந்த நாள் இன்று.

காமெடி நடிகர் செந்திலின் பிறந்த நாள் இன்று.

முனுசாமி என்று இயற்பெயர் கொண்ட காமெடி கிங் செந்தில், தற்போதுவரை 280க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இராமநாதபுரம், முதுகுளத்தூர் என்ற ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் ராமமூர்த்தி - திருக்கம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இதில் நடிகர் செந்தில் மூன்றாவதாக பிறந்தார். சிறு வயதில் தன் தந்தை அவமதித்த காரணத்தால் தன்னுடைய 12-ஆம் வயதில் ஊரை விட்டு ஓடி வந்தார்.

இதன் பிறகு என்ன செய்வதறியாமல் தவித்த இவர் முதலில் எண்ணெய் ஆட்டும் நிலையத்திலும், பிறகு மதுபான கடையிலும் பணிபுரிந்துள்ளார். இதன் பிறகு ஒரு நாடகத்தில் இணைந்து தன்னுடைய நடிப்பு திறமையை வளர்த்து கொண்டார். இதுவே அவருக்கு சினிமா துறையில் அடியெடுத்து வைக்க உதவியாக இருந்தது.

திரைத்துறையில் முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் 1983-இல் வெளியான 'மலையூர் மம்பட்டியான்' படத்தின் மூலம் திரைத்துறையினரை கவர்ந்தார். இதனை அடுத்து 14-ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு சென்ற இவரை பெற்றோர்கள் இன்பமுகத்துடன் வரவேற்பு தந்தனர். பின்னர் இவருக்கு 1984-ஆம் ஆண்டில் கலைச்செல்வி என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது.

இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என இருமகன்கள் உள்ளனர். இவருடைய நடிப்பில் வெளியான 260க்கும் மேற்பட்ட படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இவர் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து பெரும்பான்மையான படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் அனைத்தும் இன்னும் 1000 வருடங்கள் கடந்தாலும் மக்களிடம் நிலைத்து நிற்கும். தற்போது நடிகர்கள் கவுண்டமணி - செந்தில் ஆகியோர் நடிக்காவிட்டாலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்சப், டிவிட்டர் போன்றவைகளில் இவர்களின் காமெடி மீம்ஸ்களே நிறைந்து காணப்படுகிறது. அந்த அளவிற்கு இவர்களுடைய காமெடி ரசிகர்கள் மனதில் அழியா புகழ் பெற்றுள்ளது. இவர்களுடைய காமெடியை பார்த்தாலே போதும் துன்பம், துக்கமெல்லாமல் மறைந்து விடும். 

காமெடி கிங் செந்தில் பிறந்த நாளில் அவருடைய இனிமையான வாழ்க்கை வரலாறு