ads

முன்னணி திரை பட்டாளத்துடன் தன்னுடைய அடுத்த படத்தை துவங்கிய தனுஷ்

நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நெல்லையில் துவங்கியுள்ளார்

நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நெல்லையில் துவங்கியுள்ளார்

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படத்திற்கு தனுஷ், தன்னுடைய அடுத்த படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

முன்னதாக இந்த படத்தில் நாகர்ஜுனா நடிக்க உள்ளதாகவும், தனுசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இவர்களுடன் நடிகர் எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சரத்குமார், அதிதி ராவ் போன்ற முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். மேலும் தனுஷின் பவர் பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள சான் ரோல்டன் இந்த படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கிராம பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் நடக்க உள்ளது. மேலும் தனுஷின் அனேகன், மாரி, மாரி 2 போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

முன்னணி திரை பட்டாளத்துடன் தன்னுடைய அடுத்த படத்தை துவங்கிய தனுஷ்