ads

இயக்குனர் சேரனின் ராஜாவுக்கு செக் இறுதி கட்ட படப்பிடிப்பில்

நடிகர் சேரன் நடிப்பில் ராஜாவுக்கு செக் படம் தற்போது உருவாகி வருகிறது.

நடிகர் சேரன் நடிப்பில் ராஜாவுக்கு செக் படம் தற்போது உருவாகி வருகிறது.

தமிழ் திரையுலகிற்கு நல்ல தரமான மக்களுக்கு கொண்டு சேர்க்கும் இயக்குநர்களுள் ஒருவர் சேரன். ஒரு இயக்குனரான இவர் தன்னுடைய படங்களில் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த வெற்றி கோடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ஆடும் கூத்து, பொற்காலம், பாண்டவர் பூமி போன்ற படங்கள் சிறந்த படங்களுக்கான பிலிம்பேர் விருது, தமிழ்நாடு விருது தவிர தேசிய  விருதுகளையும் வென்றுள்ளது.

இவருடைய இயக்கத்தில் இறுதியாக 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' என்ற படம் வெளியானது. மேலும் இவர் மூன்று பேர் மூன்று காதல், கதை, திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களுக்கு பிறகு தற்போது 'ராஜாவுக்கு செக்' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் 'மழை' படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்ரகாஷ், சுகன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு புது போஸ்டரை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும் இயக்குனர் சேரன் இயக்கத்தில் 'ராஜாதி ராஜா' என்ற படம் உருவாகி வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தை இயக்கிய ராஜ்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தை இயக்கிய ராஜ்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
சோமன் பல்லட்டி மற்றும் தாமஸ் கோக்கட் ஆகியோர் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.சோமன் பல்லட்டி மற்றும் தாமஸ் கோக்கட் ஆகியோர் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.

இயக்குனர் சேரனின் ராஜாவுக்கு செக் இறுதி கட்ட படப்பிடிப்பில்