ads

காட்டேரி படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் டிகே

காட்டேரி படம் எப்படி உருவாகி வருகிறது என்பது குறித்து இயக்குனர் டிகே மனம் திறந்து பேசியுள்ளார்.

காட்டேரி படம் எப்படி உருவாகி வருகிறது என்பது குறித்து இயக்குனர் டிகே மனம் திறந்து பேசியுள்ளார்.

'மேயாத மான்' படத்திற்கு பிறகு நடிகர் வைபவ் ஆர்கே நகர், காட்டேரி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் டீகே இயக்கத்தில் தற்போது த்ரில்லர் படமாக உருவாகி வரும் 'காட்டேரி' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவுக்கு ஜோடியாக வரலட்சுமி, ஆத்மீகா, சோனம் பாஜ்வா ஆகிய நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இயக்குனர் டிகே 'யாமிருக்க பயமே' என்ற சூப்பர் த்ரில்லர் படத்தை இயக்கியவர். இந்த படத்திற்கு பிறகு இவருடைய இயக்கத்தில் வெளிவந்த 'கவலை வேண்டாம்' என்ற படம் ரசிகர்களுக்கு வந்ததாகவே தெரியவில்லை.

இதன் பிறகு தயாரிப்பு நிறுவனத்தை மாற்றி தற்போது காட்டேரி படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுடன் இணைந்துள்ளார். இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் டிகே "இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இது ஒரு அட்வஞ்சர் கலந்த த்ரில்லர் படம். அனைவரும் இந்த படத்தை 'யாமிருக்க பயமே' படத்தின் இரண்டாம் பாகம் என்கிறார்கள். இதில் உண்மை  இல்லை, இந்த படம் அதை விட சிறப்பாக உருவாகி வருகிறது. இந்த இரண்டு படத்திற்கும் சிறு ஒற்றுமை கூட இருக்காது. ஆனால் 'யாமிருக்க பயமே 2' இயக்கும் ஆசை உள்ளது.

இந்த படத்தின் உரிமை தயாரிப்பாளரிடம் உள்ளதால் டைட்டில் கிடைக்குமா என்று தெரியவில்லை. என்னுடைய முதல் படம் முடிந்த உடனே இரண்டாவது படத்தையும் RS இன்போடைன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிந்தேன். அவர்கள் இரண்டாவது படத்தையும் எங்களுக்கு பண்ணி கொடுங்கள் என்று கேட்டதால் ஒப்பு கொண்டேன். இதன்படி 'கவலை வேண்டாம்' படத்தை இயக்கினேன். ஆனால் ரசிகர்களுக்கு அப்படியொரு படம் வெளிவந்ததே தெரியாமல் போய்விட்டது. தயாரிப்பாளர் நிறுவனத்திடம் இருந்து முந்தைய படத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் 'காட்டேரி' தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சரியாக உள்ளார். முழு சுதந்திரத்தையும் எனக்கு அளித்துள்ளார். நமக்கு என்ன தேவையோ அதனை சரியாக செய்து தருகிறார். இந்த படத்தின் தலைப்பை வைத்ததே அவர் தான். 'காட்டேரி' என்ற பெயருக்கு பல அர்த்தங்கள் உள்ளது. நாங்கள் காட்டேரி - ரத்த காட்டேரி என்ற அர்த்தத்தில் வைக்கவில்லை. காட்டேரிக்கு மூதாதையர் என்ற ஒரு அர்த்தமும் இருக்கிறது. இது பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொருந்தும். இந்த படத்தின் நாயகனான நடிகர் வைபவ் சிறப்பாக நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக வரலட்சுமி, சோனம் பாஜ்வா, ஆத்மீகா ஆகியோர் நடித்து வருகின்றனர். முதலில் இந்த படத்தின் நாயகியாக ஓவியா தான் கமிட் ஆனார். ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புகழுக்கு பிறகு நிறைய சம்பளம் கேட்க ஆரம்பித்து விட்டார். இவருக்கு பிறகு ஹன்சிகாவிடம் பேசினோம். ஆனால் அவர் வைபவுடன் இணைந்து நடிப்பதற்கு யோசிக்க ஆரம்பித்தார். தற்போது காட்டேரி படக்குழு சிறப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை நகரத்தில் ஆரம்பித்து கிராமங்களில் முடிவடையும். இதனால் அந்த கிராமத்தை ஒரு கற்பனையாக உருவாக்கியுள்ளோம். இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக வித்தியாசமான அனுபவத்தை தரும். இந்த படத்தை குடும்பங்களுடன் பார்க்கும் போது மிகவும் ரசிப்பார்கள். குறிப்பாக இந்த படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

காட்டேரி படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் டிகே