ads

கே.எஸ்.ரவிக்குமார் அப்பாவாக நடிக்கும் 'பள்ளிப்பருவத்திலே'

palli paruvathile movie poster

palli paruvathile movie poster

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர். தாம் இயக்கும் படங்களில் அவர் தன்னை படத்தின் இறுதியில் அறிமுகம் செய்து கொள்வது வழக்கமாக வைத்திருந்தார். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் திரைப்படங்களில் 25 படங்களுக்கு மேல் ஒரு நடிகராக தனது நடிப்பு திறைமையை காட்டியுள்ளார். இதனை அடுத்து இவர் தற்போது இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர் இயக்கும் 'பள்ளிப்பருவத்திலே' படத்தில் கதாநாயகனுக்கு தந்தையாகவும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும் நடிக்கிறார். இந்த படத்தில் இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தனராம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக வெண்பா நடிக்கிறார். இந்த படத்தில் ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு விஜய் நாராயணன் இசையமைத்திருக்கிறார். 

இந்த படம் அடுத்த மாதம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்த படம் கலகலப்பான குடும்ப சூழல், காதல், பள்ளிமாணவர்கள் போன்றவற்றை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இது குறித்து இயக்குனர் பேசும்போது " இந்த படம் சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுத்து. பள்ளிப்பருவத்திலே நான் எதிர்கொண்ட சம்பவங்கள் படத்தில் இணைத்துள்ளேன் அவை ரசிகர்களை மிகவும் ரசிக்க வைக்கும். இந்த படத்தை பார்க்கும்போது உங்களது பள்ளி பருவம் நினைவிற்கு வரும்." என்று தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார் அப்பாவாக நடிக்கும் 'பள்ளிப்பருவத்திலே'