ads

தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பினை வெளியிட்ட மோகன் ராஜா

தனி ஒருவன் படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகி விட்டநிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனி ஒருவன் படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகி விட்டநிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'தனி ஒருவன்'. இந்த படம் வெளியாகி இன்றுடன் மூன்று வருடங்களை கடந்துள்ளது. தன்னுடைய தம்பியான நடிகர் ஜெயம் ரவியை நாயகனாக வைத்து உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடம் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இது தவிர நடிகர் அரவிந் சாமிக்கு இந்த படம் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்த பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. ஹிப் ஹாப் ஆதியின் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் மற்றும் BGM போன்ற அனைத்து படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது. மேலும் இந்த படம் பிலிம்பேர், IIFA உற்சவம், சவுத் இந்தியன் இன்டர்நெஷனல் விருதுகள் போன்ற பல மேடைகளில் சிறந்த வில்லன், சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குனர் என மொத்தமாக 37 விருதுகளுக்கு தேர்வாகி 15 விருதுகளை வென்றுள்ளது.

இந்த படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகி விட்ட நிலையில் தற்போது ரசிகர்களுக்கு இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பினை இயக்குனர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் என்னுடைய அடுத்த படம் தனி ஒருவன் 2, இந்த படத்திலும் ஜெயம் ரவி தான் ஹீரோ, முந்தைய பாகத்தை விட இந்த படத்திற்கு அதிக உழைப்பினை கொடுப்போம் என அவர் தெரிவித்துள்ளனர்.

தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பினை வெளியிட்ட மோகன் ராஜா