ads

சுந்தர் சியின் இருட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் உருவாகவுள்ள திகில் படத்திற்கு இருட்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் உருவாகவுள்ள திகில் படத்திற்கு இருட்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர் சி, கலகலப்பு 2 படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து 'அட்டரண்ட்டிகி தாரெடி' தமிழ் ரீமேக்கை உருவாக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஜியார்ஜியாவுல் துவங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார். லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு பிறகு சுந்தர் சி அடுத்ததாக ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோரை வைத்து 'சங்கமித்ரா' என்ற பிரமாண்ட படத்தை உருவாக்க உள்ளார்.

இதற்கிடையில் இவர் 'இருட்டு' என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தினை அறிமுக இயக்குனர் VZ துரை என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சுந்தர் சி 2009இல் வெளியான 'தீ' என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். இதன் பிறகு மீண்டும் போலீஸ் அதிகாரியாக 'இருட்டு' படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. முன்னதாக சுந்தர் சி, அரண்மனை, அரண்மனை 2 போன்ற த்ரில்லர் பேய் படங்களை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு ஒரு நடிகராக த்ரில்லர் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். மெரினா, அவள் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள கிரிஷ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர் சியின் இருட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர் சியின் இருட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சுந்தர் சியின் இருட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு