ads

அடுத்த கட்ட படப்பிடிப்பில் துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

dulquer salmaan Kannum Kannum Kollaiyadithal shooting updates

dulquer salmaan Kannum Kannum Kollaiyadithal shooting updates

மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான் கடந்த 2012ல் வெளிவந்த 'செக்கண்டு சோவ்' படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தமிழ் திரையுலகில் 'வாயை மூடி பேசவும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மணிரத்னம் இயக்கத்தில் 'ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தார். காதலை மையமாக கொண்டு உருவாகிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.   

தற்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்த 'சோலோ' படத்தின் வெற்றியை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக  ‘பெல்லி சூப்புலு’ புகழ் ரித்து வர்மா இணைந்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தில் டி.இமான் இசையமைக்க கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டு வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று ( 29.1.18) முதல் சென்னை நகரத்தில் நடைபெற்று வருவதாக படத்தின் ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் அவரது ட்விட்டரில் பதிவு செய்வதோடு ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படபிடிப்பு 40 நாட்கள் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் படத்தின் டீசர், ட்ரைலர் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

அடுத்த கட்ட படப்பிடிப்பில் துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்