ads

துல்கர் சல்மானின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'

துல்கர் சல்மானின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'

துல்கர் சல்மானின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளியான 'வாயை மூடி பேசவும்' மற்றும் 'ஓகே கண்மணி' போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிப்பில் தற்போது 'சோலா' படம் வெளிவந்தது. இந்த படமும் ஒரு மாபெரும் வெற்றியை அடையவில்லை. இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து இந்த படத்திற்க்கு கதாநாயகியாக ரிது வர்மா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை டெல்லியில் துவங்குகிறது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஐ.டி ஊழியராக நடித்துள்ளார். இந்த முழுக்க முழுக்க சாலைகளில் படமாக்க படுகிறது. 

இந்த படத்தின் தலைப்பை தற்போது "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1993-இல் மணிரத்னம் இயக்கத்தில் 'திருடா திருடா' படத்தில் தான் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற பாடல் இடம்பெறும். இதனை அடுத்து துல்கர் சல்மான், நாக் அஸ்வின் இயக்கத்தில் சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெமினி கணேசனாக நடித்து வருகிறார். இதுதவிர அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

துல்கர் சல்மானின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'