ads

ஒரு வழியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பை நிறைவு செய்த கவுதம் மேனன்

நீண்ட வருடங்களாக உருவாகி வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவடைந்துள்ளது.

நீண்ட வருடங்களாக உருவாகி வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவடைந்துள்ளது.

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு பிறகு துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களுமே பண பிரச்சனையால் நீண்ட வருடங்களாக தாமதமாகி கொண்டு வந்தது. தற்போது இரண்டு படங்களுமே தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் நடிகர் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவடைந்துள்ளது. இதற்கான அறிவிப்பினை இயக்குனர் கவுதம் மேனன் நேற்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததை ஒட்டி சசிகுமார், கவுதம் மேனன் மற்றும் மேகா ஆகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர். முன்னதாக இந்த படம் தீபாவளிக்கு வெளியாவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது படக்குழு இதனை உறுதி செய்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த படம் விஜயின் 'சர்கார்' படத்துடன் மோத உள்ளது. மேலும் இந்த படத்தில் இந்த படத்தின் இயக்குனர் கவுதம் மேனனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தற்புக சிவா இசையமைப்பில், ஒன்றாக மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு வழியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பை நிறைவு செய்த கவுதம் மேனன்