ads

கோபி நயினாரின் அடுத்த படத்தில் ஜோடியாக இணைந்த ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷ்

அறம் இயக்குனர் கோபி நயினாரின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறம் இயக்குனர் கோபி நயினாரின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான நயன்தாராவின் அறம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார்.  தன்னுடைய முதல் படத்திலே சமூகத்தில் நடக்கும் அவலங்களை எடுத்துரைத்தால் அவருக்கு பலத்த எதிர்ப்புகள் வந்தது. பல தடைகளை தாண்டி நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த படம் தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்திற்கு பிறகு கோபி நயினார் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

அறம் படத்திற்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் பிறகு நடிகர் ஜெய்யை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிரசாத் என்ற புதுமுகம் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் விஜி சந்திரசேகர், சங்கிலி முருகன், பி.எல்.தேனப்பன், ஆர்.என்.ஆர் மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இந்த படம் குறித்து இயக்குனர் கோபி நயினார் கூறுகையில் "அறம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பிறகு என்னுடைய அடுத்த படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த படம், வெளிநாட்டு பணக்காரன்களால் தமிழ்நாடும், தமிழினமும் எப்படி சீரழிந்து வருகிறது என்பது எடுத்துரைக்கும். இந்த படத்தில் ஜெய் விளையாட்டு வீரர், இந்த படம் சென்னையை சுற்றி நடக்கும் படம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோபி நயினாரின் அடுத்த படத்தில் ஜோடியாக இணைந்த ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷ்