ads

ரேடியோ ஜாக்கியாக இருந்து டீச்சராக மாறிய ஜோதிகா

ரேடியோ ஜாக்கியாக இருந்து டீச்சராக மாறிய ஜோதிகா

ரேடியோ ஜாக்கியாக இருந்து டீச்சராக மாறிய ஜோதிகா

தமிழ் சினிமாவில் 40 வயதானாலும் முன்னணி நடிகையாக வளம் வரும் ஜோதிகா தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியவதும் அளிக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்ததாக 'காற்றின் மொழி' படம் விரைவில் வெளியாகவுள்ளது. இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரேடியோ ஜாக்கியாக ஜோதிகா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான பூஜை தற்போது நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் ஜோதிகா உள்ளிட்ட அணைத்து படக்குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர். புது முக இயக்குனர் ஆர் ராஜ் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சமூக அக்கறை கொண்டதாக உருவாகவுள்ள இந்த படத்தில் ஜோதிகா டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

ரேடியோ ஜாக்கியாக இருந்து டீச்சராக மாறிய ஜோதிகா