ads

ரஜினி செல்வி என்ற படத்தில் ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா

காற்றின் மொழி படத்திற்கு பிறகு மோகன்லால் என்ற படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்க உள்ளார்.

காற்றின் மொழி படத்திற்கு பிறகு மோகன்லால் என்ற படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்க உள்ளார்.

நடிகை ஜோதிகா 2007இல் வெளியான 'மணிகண்டா' என்ற படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு குட்பை சொல்லிட்டு குடும்பத்தை கவனிக்க சென்று விட்டார். பின்னர் எப்படியோ 6 வருடங்களுக்கு பிறகு 2015இல் '36 வயதினிலே' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎன்ட்ரி ஆனார். இந்த படத்திற்கு பிறகு இரண்டு வருடங்களுக்கு பிறகு மகளிர் மட்டும் என்ற படம் வெளியானது. தொடர்ந்து நல்ல கதையை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்த ஜோதிகா, மிரட்டலான போலீஸ் கதாபாத்திரத்தில் 'நாச்சியார்' படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு தற்போது தும்ஹரி சுலு படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் 'காற்றின் மொழி' என்ற படத்திலும், இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்க சிவந்த வானம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு இவரது நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மஞ்சு வாரியார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் 'மோகன்லால்'. இந்த படம் மோகன்லால் ரசிகராக இருக்கும் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரிஸ்யமான சம்பவங்களை எடுத்துரைக்கும் படமாக வெளியாகியுள்ளது.

இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியிலும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. முன்னதாக மஞ்சு வாரியார் நடிப்பில் வெளியான 'How Old Are You' என்ற படத்தின் ரீமேக்காக '36 வயதினிலே' படத்தின் மூலம் ஜோதிகா ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது 'மோகன்லால்' படத்தின் ரீமேக்கில் மஞ்சு வாரியார் நடித்த கதாபத்திரத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். இந்த படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ரஜினிகாந்த் ரசிகராக ஜோதிகா நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் தலைப்பு 'ரஜினி செல்வி' என்று வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி செல்வி என்ற படத்தில் ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா