ads

டிசம்பர் 6-இல் கவிஞர் கண்ணதாசன் பேரனுக்கு திருமணம்

டிசம்பர் 6-இல் கவிஞர் கண்ணதாசன் பேரனுக்கு திருமணம்

டிசம்பர் 6-இல் கவிஞர் கண்ணதாசன் பேரனுக்கு திருமணம்

கண்ணதாசன் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் புத்தகங்கள், கட்டுரைகள் என இவரது படைப்புகள் ஏராளம். இவர் சண்டமாருதம், திருமகள், திரைஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசியராக இருந்தவர். மேலும் இவர் சாகித்திய அகாடமி விருது போன்ற பல விருதுகளை பெற்றவர். இவருக்கு மொத்தம் 15 பிள்ளைகள்.

கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் ' பொன்மாலை பொழுது' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த படம் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்தது. இந்த படத்தை ஏ.சி.துரை இயக்கியிருந்தார். இதை அடுத்து இவர் 2014-இல் வெளிவந்த 'யாமிருக்க பயமே' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ஆதவ் கண்ணதாசனுக்கும் சென்னையை சேர்ந்த வினோதினி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அடுத்து டிசம்பர் 6-ஆம் தேதி சென்னை, மேயர் ராமநாதன் செட்டியார் சென்டர், வள்ளியம்மை திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

டிசம்பர் 6-இல் கவிஞர் கண்ணதாசன் பேரனுக்கு திருமணம்