ads

சீமராஜா யூடர்ன் படங்களுடன் மோத தயாரான நரகாசூரன்

கார்த்திக் நரேனின் நரகாசூரன் படத்தின் வெளியீடு தேதி ஆகஸ்ட் 31இல் இருந்து செப்டம்பர் 13க்கு மாற்றப்பட்டுள்ளது.

கார்த்திக் நரேனின் நரகாசூரன் படத்தின் வெளியீடு தேதி ஆகஸ்ட் 31இல் இருந்து செப்டம்பர் 13க்கு மாற்றப்பட்டுள்ளது.

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந் சாமி, சுதீப் கிஷன், இந்திரஜித், ஷ்ரேயா, ஆத்மீகா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நரகாசூரன்'. இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'துருவங்கள் பதினாறு' படத்திற்கு பிறகு இரண்டாவது படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 31இல் வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது எதிர்பாராத காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு மட்டும் சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே தயாரிப்பாளர் பிரச்சனையால் படப்பிடிப்பு தாமதமாகி ஒருவழியாக தட்டு தடுமாறு வெளியீட்டிற்காக தயாராக இருந் நிலையில் தற்போது இந்த படத்தின் தள்ளிபோகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாறு சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்த நிலையில் இவரின் அடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்புகள் பலமாகவே உள்ளது.

பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 13இல் விநாயகர் சதுர்த்தியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 31இல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படத்துடன் மோத இருந்தது. தற்போது விநாயகர் சதுர்த்திக்கு மாற்றப்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயனின் சீமராஜா மற்றும் சமந்தாவின் யூடர்ன் போன்ற படங்களுடன் மோத தயாராக உள்ளது. இந்த மூன்று படங்களுக்குமே ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

சீமராஜா யூடர்ன் படங்களுடன் மோத தயாரான நரகாசூரன்