ads

மீண்டும் மோகன்லால் பிரியதர்சன் கூட்டணியில் இணைந்துள்ள கீர்த்தி சுரேஷ்

5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால் பிரியதர்சன் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால் பிரியதர்சன் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

மலையாள குடும்பத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் ஒரு நடிகையாக மோகன்லாலின் 'கீதாஞ்சலி' படத்தின் மூலம் அறிமுமானார். இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நடித்திருந்தார். ஆனாலும் 2013இல் வெளியான 'கீதாஞ்சலி' படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார்.

ஆனால் தமிழ் சினிமாவில் இவருடைய முதல் படமான 'இது என்ன மாயம்' கைகொடுக்கா விட்டாலும் இரண்டாவது படமான 'ரஜினி முருகன்' நல்ல அடையாளத்தை தேடி தந்தது. பின்னர் தமிழ் ரசிகர்கள் பலத்த வரவேற்பால் இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சாமி 2 படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் அடுத்ததாக சண்டக்கோழி 2, சர்கார் போன்ற படங்கள் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இவர் மீண்டும் மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க உள்ளார். இவருடைய முதல் அறிமுக படமான 'கீதாஞ்சலி' படத்தை இயக்குனர் பிரியதர்சன் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு 5 வருடங்கள் கழித்து மீண்டும் பிரியதர்சன், மோகன்லால் கூட்டணியில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் (Marakkar: Arabikadalinte Simham) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மிகுந்த பொருட்செலவில் உருவாக உள்ள இந்த படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மோகன்லாலின் இளமை தோற்றத்தில் அவருடைய மகன் பிரணவ் மோகன்லால் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் பிரியதர்சன் மகளான கல்யாணி ப்ரியதர்சன் நடிக்கிறார். 

மீண்டும் மோகன்லால் பிரியதர்சன் கூட்டணியில் இணைந்துள்ள கீர்த்தி சுரேஷ்