ads

சின்னத்திரை நோக்கிவரும் சினிமா பிரபலங்கள்

நடிகர் கமலை தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பில் இறங்கியுள்ள பிரபல நடிகர்கள்

நடிகர் கமலை தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பில் இறங்கியுள்ள பிரபல நடிகர்கள்

சின்ன திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக தங்களுடைய கேரியரை துவங்கி சினிமாவில் கால் பதித்தவர்கள் இருக்கிறார்கள், சினிமாவில் பெரியதாக ஒரு வாய்ப்பும் இல்லாமல் சின்னத்திரை  பக்கம் ஒதுங்கியவர்களும் உண்டு. ஆனால் சினிமா துறையில் இன்னும் முக்கிய பிரபலங்களாக ஜொலிக்கும் சில நட்சத்திரங்கள், இந்த பக்கம் லேசாக தலையை சாய்ப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது என்பது உண்மை. 

கமல் பிக் பாஸ்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடிவு செய்த பொது இவருக்கு ஏன் இந்த வேலை என்று கேட்டோர் உண்டு. ஆனால் இது மக்களை சந்திக்க ஒரு வாய்ப்பு என்று அவரே வெளிப்படையாக சொன்ன பிறகுதான் அதன் பின்னணியிலிருக்கும் மனோதத்துவம்  பலருக்கும் புரிந்தது. 

அது மட்டுமில்லாமல், பெரிய திரையில் வருடம் ஒரு முறையோ இருமுறையோ பார்க்க முடிகிற நடிகர்களை, தங்கள் வீட்டு அறை தொலைக்காட்சியில் தினசரியோ அல்லது வாரம் இரு முறையோ பார்த்து மகிழ மக்களுக்கும் விருப்பம் இருப்பது அவர்கள் பிக் பாஸிற்கு கொடுத்த வரவேற்பில் தெரிந்து விட்டது.

இப்பொழுது இதே பாணியில் பிரசன்னா சன் டி.வி.யில் "சொப்பன சுந்தரி" நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் ஆகிவிட்டார். அடுத்து "நாம் இருவர்" நிகழ்ச்சிக்கு நடிகர் விஷால் தொகுப்பாளர் ஆனார். அடுத்து நடிகை வரலக்ஷ்மி "உன்னை அறிந்தால்" நிகழ்சசியை தொகுத்து வழங்க உள்ளார்.

இப்படி பல பிரபலங்களால் நிரம்பி உள்ளதால், டி.வி. மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. ஆனால் அதனுடைய தரம் கூடியுள்ளாதா என்று கேட்டால் நம்மால் உறுதியாக சொல்ல முடியாது.

சின்னத்திரை நோக்கிவரும் சினிமா பிரபலங்கள்