ads

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் ஒரு கோடி நிதியுதவி

லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் கேரளா மக்களுக்காக ஒரு கோடி வழங்கியுள்ளது.

லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் கேரளா மக்களுக்காக ஒரு கோடி வழங்கியுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத கனமழையால் மாநிலமே வெள்ளத்தால் மூழ்கி தத்தளிக்கிறது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவ தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் இருந்தும் தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். கேரளாவின் வெள்ள பாதிப்பை சரிசெய்ய ஏராளமான சினிமா பிரபலங்கள்  தங்களால் முடிந்த நிதியுதவியினை அளித்து வருகின்றனர். தற்போது லைக்கா ப்ரொடக்சன் நிறுவனமும் கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஒரு கோடி அளித்துள்ளது.

லைக்கா ப்ரொடக்சன் சார்பில் மேலாளர் நிசாந்தன் நிருதன் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நிதியுதவியினை வழங்கியுள்ளார். முன்னதாக நடிகர் லாரன்ஸ் ஒரு கோடி அளித்துள்ள நிலையில் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் ஒரு கோடியை வழங்கியுள்ளது. கேரளாவில் தற்போது கனமழை குறைந்து வெள்ளநீர் வடிந்து வருகிறது. ஆனாலும் ஏராளமான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை தங்களால் முடிந்த நிவாரணபொருட்களை வழங்கி வருகின்றனர். 

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் ஒரு கோடி நிதியுதவி