ads

சிவகார்த்திகேயன் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர்

மெர்சல், சர்கார் போன்ற படங்களுக்கு பாடல் வரிகளை அமைத்துள்ள பாடலாசிரியர் விவேக், சிவகார்த்திகேயனின் புது படத்திலும் மூன்று பாடல்களுக்கு பாடல் வரி அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மெர்சல், சர்கார் போன்ற படங்களுக்கு பாடல் வரிகளை அமைத்துள்ள பாடலாசிரியர் விவேக், சிவகார்த்திகேயனின் புது படத்திலும் மூன்று பாடல்களுக்கு பாடல் வரி அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தற்போது 'சீம ராஜா' படத்திற்கு பிறகு இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் புதுப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீம ராஜா' வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடித்துள்ளார். சமந்தாவிற்கு பிறகு தனது அடுத்த படத்திற்கு ரகுல் ப்ரீத் சிங்குடன் சிவகார்த்திகேயன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்த படத்தில் அறிவியல் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு மூன்று பாடல்களுக்கு பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை அமைத்துள்ளார். தற்போது இளைஞர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இவர் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இந்த பாடலுக்கு சிறந்த பாடலுக்கான பல விருது கிடைத்துள்ளது.

மெர்சல் படத்திற்கு பிறகு சர்கார் படத்திலும் இந்த கூட்டணி பணிபுரிந்து வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டணி சிவகார்த்திகேயன் படத்திலும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் 13வது படத்திற்கு இசைப்புயல் தான் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையமைப்பில் மூன்று பாடல்களுக்கு பாடல் வரிகளை அமைத்துள்ளதாக பாடலாசிரியர் விவேக் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர்