ads

இரண்டு படத்திற்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்த அனுஷ்கா

சுந்தர் சியின் இரண்டு படத்திற்கு பிறகு மீண்டும் மாதவனுடன் 12 வருடங்களுக்கு பிறகு அனுஷ்கா இணைந்துள்ளார்.

சுந்தர் சியின் இரண்டு படத்திற்கு பிறகு மீண்டும் மாதவனுடன் 12 வருடங்களுக்கு பிறகு அனுஷ்கா இணைந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான மாதவன் நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'விக்ரம் வேதா'. புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் வெளியான இந்த படம் 100 நாட்களை கடந்து பல விருதுகளை வென்று மாபெரும் வெற்றியை கண்டது. இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இவர் தற்போது தெலுங்கில் சவ்யசாச்சி மற்றும் இந்தியில் ஷாருக் கானுடன் இணைந்து ஜீரோ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். த்ரில்லர் பட இயக்குனரான இவர் மாதவனை வைத்து புதுவித த்ரில்லர் கதைக்களத்துடன் வித்தியாசமான படத்தை உருவாக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிக்க நாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2006இல் வெளியான 'இரண்டு' படத்தில் மாதவனும், அனுஷ்காவும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தமிழில் அனுஷ்கா அறிமுகமான முதல் படம். இந்த படத்திற்கு பிறகு 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு 'சைலன்ட்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை பீப்புள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ளது. அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பினை துவங்க உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மூன்று மொழிகளிலும் உருவாக உள்ளது.

இரண்டு படத்திற்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்த அனுஷ்கா