ads

தனி ஒருவன் 2வில் அரவிந் சாமி கதாபாத்திரத்தை பூர்த்தி செய்வாரா மம்முட்டி

மோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் அரவிந் சாமி கதாபாத்திரத்தை போன்று மம்முட்டி வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் அரவிந் சாமி கதாபாத்திரத்தை போன்று மம்முட்டி வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் மோகன் ராஜா, வேலைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதில் மும்முரமாக களமிறங்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவியும், நயன்தாராவும் அதே கதாபாத்திரத்தில் தொடர்கின்றனர். ஆனால் முந்தைய பாகத்தில் நடித்த அரவிந் சாமி கதாபாத்திரத்திற்கு இணையாக நடிக்க வைக்க முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

அரவிந் சாமியின் சித்தார்த் அபிமன்யுவின் கதாபாத்திரத்திரம் தனி ஒருவன் படத்தை இன்றளவும் பேசும் அளவிற்கு மிகவும் வலுவானதாக இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்கு இணையான ஒரு கதாபாத்திரத்தை அமைப்பதில் படக்குழுவிற்கு பெரும் சவாலாக உள்ளது. தற்போது தனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக நடிக்க வைக்க நடிகர் மம்முட்டியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மலையாள முன்னணி நடிகரான மம்முட்டி தற்போது பேரன்பு, மாமாங்கம், ஒரு குட்டண்டன் பிளாக் மற்றும் யாத்ரா போன்ற படங்கள் உருவாகி வருகிறது. 

இந்த படங்களுக்கு பிறகு தனி ஒருவன் 2 படத்தில் அவரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.இன்று நடிகர் மம்முட்டியின் 67வது பிறந்த நாள். அவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 'தனி ஒருவன் 2' படத்தில் வில்லனாக மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி நடிப்பது உறுதியானால் இந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கும். 

தனி ஒருவன் 2வில் அரவிந் சாமி கதாபாத்திரத்தை பூர்த்தி செய்வாரா மம்முட்டி