ads

மாயா இயக்குனரின் கேம் ஓவர் படப்பிடிப்பு துவக்கம்

இயக்குனர் அஸ்வின் சரவணனின்

இயக்குனர் அஸ்வின் சரவணனின் 'கேம் ஓவர்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது.

நயன்தாராவின் 'மாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். இசையமைப்பாளர் ரோன் எதன் யோகன் இசையமைப்பில் த்ரில்லராக வெளியான இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்த படம் கன்னடத்திலும் 'ஏக்' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் 'இறவாக்காளம்' படம் உருவானது.

ஆனால் எதிர்பாராத காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தாமதமாகி கொண்டு செல்கிறது. இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் இயக்குனர் அஸ்வின். இந்த படத்திற்கு 'கேம் ஓவர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

மாயா இயக்குனரின் கேம் ஓவர் படப்பிடிப்பு துவக்கம்

இந்த படத்தில் டாப்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாயா, இறவாக்காளம் படங்களுக்கு இசையமைத்துள்ள ரோன் எதன் யோகன் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பினை நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளனர். இந்த படத்தினை சசிகாந்த்தின் வை நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளனர். மாயா படத்தை போன்று இந்த படமும் த்ரில்லர் படம் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

மாயா இயக்குனரின் கேம் ஓவர் படப்பிடிப்பு துவக்கம்

மாயா இயக்குனரின் கேம் ஓவர் படப்பிடிப்பு துவக்கம்