ads

மோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் நாயகிகள்

இயக்குனர் மோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ள நாயகிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ள நாயகிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வேலைக்காரன் படத்தின் வீட்டிற்கு பிறகு இயக்குனர் மோகன் ராஜாவின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். முன்னதாக இவர் தளபதி விஜயின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக இயக்குனர் மோகன் ராஜா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

2015இல் வெளியான 'தனி ஒருவன்', சித்தார்த் அபிமன்யுவின் மிரட்டல் கதாபாத்திரத்தில் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் இந்த படத்தில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை சாகடித்து விட்டனர். இதனால் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் முந்தைய பாகத்தை விட வலுவான மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தை அமைக்க உள்ளனர்.

இந்த படம் முந்தைய படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திலும் ஜெயம் ரவி, தனுக்கு ஏத்த எதிரியை தேடும் எஸ்பியாக நடிக்க உள்ளார். முந்தைய பாகத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவே இந்த படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளார். இவருடன் மற்றொரு நாயகியாக சயிஷா சாகல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் குறித்த அறிவிப்பினை படக்குழு அறிவிக்க உள்ளது.

மோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் நாயகிகள்