ads

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் நயன்தாரா கூட்டணி

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் நயன்தாரா கூட்டணி

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் நயன்தாரா கூட்டணி

இயக்குனர் ஏஆர் முருகதாஸின் 'சர்கார்' படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் 'தளபதி 63'. தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 2009இல் வெளியான 'வில்லு' படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்த நயன்தாரா, 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்தில் நடிக்க உள்ளார். 'வில்லு' படத்தின் படப்பிடிப்பின் போது நயன்தாராவுக்கும், விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதனால் தான் 10 வருடங்களாக நயன்தாராவிற்கு, விஜய் தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை ஒரு வழியாக இயக்குனர் அட்லீ பேசி சமாதானம் செய்து 'தளபதி 63'இல் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் இயக்குனர் அட்லீயின் 'ராஜா ராணி' படத்திற்கு பிறகு மீண்டும் அட்லீ படத்தில் நயன்தாரா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அட்லீ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் மற்றும் நயன்தாரா இவர்களுடன் இந்த படத்தில் நடிகர் விவேக், யோகி பாபு ஆகியோரும் இணைந்துள்ளனர். இசைப்புயலின் இசையமைப்பில் உருவாகவுள்ள இந்த படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் நயன்தாரா கூட்டணி