ads

பிர்சா முண்டா அவர்களின் வாழ்க்கை கதை மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகும் பா ரஞ்சித்

பிர்சா முண்டா அவர்களின் வாழ்க்கை கதை மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகும் பா ரஞ்சித்

பிர்சா முண்டா அவர்களின் வாழ்க்கை கதை மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகும் பா ரஞ்சித்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பா ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான ,படம் 'காலா'. இந்த படத்திற்கு பிறகு இவருடைய தயாரிப்பில் வெளியான 'பரியேறும் பெருமாள்' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வசூலிலும் நல்ல முன்னேற்றம் கண்டது. இந்த படங்களுக்கு பிறகு பழங்குடி இனத்தவரின் விடுதலை போராட்ட வீரரான பிர்சா முண்டா அவர்களின் வாழ்க்கை கதையை உருவாக்க உள்ளார்.

இந்த படம் இந்தியில் உருவாகவுள்ளது. இந்த படம் மூலம் பா ரஞ்சித் இயக்குனராக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இந்த படத்தினை நம்மா பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான பணிகளும் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் ஏற்கனவே 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் பிர்சா முண்டாவின் வாழ்க்கை கதையை உருவாக்குவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித்தும் 'பிர்சா முண்டா' வாழ்க்கை கதையை இயக்குவதாக அறிவித்துள்ளார். 

பிர்சா முண்டா அவர்களின் வாழ்க்கை கதை மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகும் பா ரஞ்சித்