ads

'பேய் இருக்கா இல்லையா' படத்தின் கதையை சொல்லும் இயக்குனர்

'பேய் இருக்கா இல்லையா' படத்தின் கதையை சொல்லும் இயக்குனர்

'பேய் இருக்கா இல்லையா' படத்தின் கதையை சொல்லும் இயக்குனர்

டீம் ஒர்க்ஸ் டாக்கீஸ் சார்பில் பா.ரஞ்சித்குமார் தயாரித்து இயக்கும் படம் 'பேய் இருக்கா இல்லையா'. இந்த படத்தில் அமர், ஜோதிஷா, லிவிங்ஸ்டன், விஜய் குமார், தாடி பாலாஜி, பொன்னம்பலம், மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.மகிபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆர்.சம்பத் இசையமைக்கிறார். இந்த படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித்குமார் கூறுகையில் "உதவாக்கரையான நான்கு பேர். இவர்கள் தாதாவின் தம்பியை அடித்துவிடுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த தாதா அவர்களை கொள்ள துடிக்கிறான். 

தாதாவிடம் இருந்து தப்பிக்க ஒரு அமானுஷ்ய பங்களாவில் அடைக்கலமாகின்றனர். இவர்கள் வெளியே வந்தால் தாதா கொன்றுவிடுவான். உள்ளே இருந்தால் பேய் கொன்றுவிடும். இந்நிலையில் நால்வரும் என்ன செய்கிறார்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை" என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னை, அலங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. படத்தின் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த படத்தை டிசம்பரில் வெளிவிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

'பேய் இருக்கா இல்லையா' படத்தின் கதையை சொல்லும் இயக்குனர்