ads

தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் மீது மதுபோதையில் கார் ஒட்டியதாக வழக்கு

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பிஎல் தேனப்பன் மீது குடிபோதையில் கார் ஒட்டியதாக வழக்கு பதிவாகியுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பிஎல் தேனப்பன் மீது குடிபோதையில் கார் ஒட்டியதாக வழக்கு பதிவாகியுள்ளது.

நாட்டில் இறப்பவர்களின் எண்ணிக்கையில் குடிபோதையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களே அதிகம். இதனை குறைக்க காவல் அதிகாரிகள் நள்ளிரவு முழுவதும் வேலை பார்த்து தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக தினமும் காவல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சிக்கிய பல குடிமகன்களுக்கு லைசன்ஸ் நிராகரித்தும், அபராதம் விதித்தும் காவல் அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். இந்த சோதனையில் தற்போது ஏராளமானோல் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் சென்னையில் உள்ள கதீட்ரட் என்ற சாலையில் சோதனையில் ஈடுபட்ட போது பிரபல திரைப்பட தயாரிப்பாளரான பிஎல் தேனப்பன் காரில் வந்துள்ளார்.

அவரை மேற்கொண்ட சோதனையில் தேனப்பன் மது அருந்திவிட்டு காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதன் பிறகு தயாரிப்பாளர் தேனப்பன் மீது வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தேனப்பன் 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். இவர் ஒரு நடிகராக முத்து, குரங்கு பொம்மை, பலூன், ஸ்கெட்ச், மதுர வீரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் மீது மதுபோதையில் கார் ஒட்டியதாக வழக்கு